web log free
July 01, 2025

தனது இறுதி முடிவை அறிவித்தார் ரணில்!

முதலில் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா நடத்தப்படும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு நேற்று கூடிய அமைச்சரவைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd