web log free
April 22, 2025

வெப்பம் குறித்து இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், இன்று (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் அவதானத்திற்கு உரிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd