web log free
May 11, 2026

கெஹலிய விரும்பினால் அனுப்பவும்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பிரதம சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன அறிவித்துள்ளார்.

அதுவும் ரம்புக்வெல்ல விரும்பினால் மட்டுமே.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமையினால்,  இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd