web log free
June 25, 2026

ஞானசார தேரருக்கு திடீர் நெஞ்சு வலி

நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், இந்த உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd