web log free
May 03, 2024

ஞானசார தேரர் தொடர்ந்து ஜம்பருடன் சிறையில்

நான்கு வருடங்களாக கடுங்காவல் சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்கான விசேட உண்மைகள் எவையும் நீதிமன்றில் வெளிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஞானசார தேரரின் உடல்நிலை மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு, அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் ஞானசார தேரரிடமிருந்து இந்த பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.