web log free
May 08, 2024

மைத்திரியின் அதிகாரத்தை கையில் எடுத்து நிமல் சிறிபாலடி சில்வா

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவுக்கு அழைப்பு விடுக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த, சட்டரீதியாக அழைக்கப்படக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.