web log free
May 05, 2024

அதிகாரத்தை கையிலெடுத்த நிமல் சிறிபாலடி சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரான நிமல் சிறிபாத சில்வா அழைப்பில் இன்றைய தினம் (08) நடைபெறவுள்ள அரசியல் பீடக் கூட்டம் சட்டரீதியாக நடைபெறாது என கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அரசியல்பீட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தலைவருக்கு மாத்திரமே உண்டு எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் சிரேஷ்ட உபதலைவர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் பெறப்பட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் தற்போது அந்த பதவியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.