web log free
May 06, 2024

பள்ளிவாசல் பாதுகாப்பு அதிகரிப்பு

இஸ்லாமிய பள்ளிவாயல்கள் தொடர்பில் சிறிலங்கா காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும்  இராணுவத்தின் பாதுகாப்புப் படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 இஸ்லாமிய பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 5,580 காவல்துறை அதிகாரிகளும் 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 3,203 இஸ்லாமிய பள்ளிகளில், 1,260 ராணுவ வீரர்களுடன் 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.