web log free
February 05, 2026

கட்சியை வளர்க்க நாமல் போட்டுள்ள திட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தரை மட்டத்தில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ரப்பக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக கட்சி உறுப்பினர்களுக்கு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, தங்காலை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் பலப்படுத்தப்படும் என்றும் எம்.பி கூறினார். 

நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுனவை நிலைநிறுத்துவதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்பை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd