web log free
September 18, 2025

நெடுஞ்சாலை வருமானம் உச்சத்தை தொட்டது

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நெடுஞ்சாலைகள் மூலம் பதினைந்து கோடியே தொண்ணூற்றெட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ரி.ஐ.டி.கஹடபிட்டிய தெரிவித்தார்.

13ஆம் திகதி சனிக்கிழமையன்று நெடுஞ்சாலைகளின் வருவாய் இரண்டு கோடியே நாற்பத்தாறு லட்சத்து எழுபத்தாறாயிரத்து நானூறு என்று கூறினார். 

அக்காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் நாற்பத்து மூன்று இலட்சத்து ஐந்தாயிரத்து ஐம்பத்தொரு வாகனங்கள் செலுத்தப்பட்டதாக கஹடபிட்டிய குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd