web log free
October 24, 2025

வடமேல் ஆளுநருக்கு ஆதரவாக பிக்குகள்

வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவை தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க அந்த மாகாண மகாசங்கரத்னம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் நாட்களில் எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் இந்தக் கோரிக்கையை விடுக்க உள்ளதாக ஆளுநர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அந்த மாகாணத்தில் மிகச் சிறப்பாகச் செயற்படுவதால், அவர் தொடர்ந்தும் அந்த மாகாணத்தில் சேவையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது மகா சங்கரத்னவின் கருத்தாகும்.

எனினும் இதுவரையில் இடமாற்றம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd