web log free
July 27, 2025

மே தினத்தில் அரசியல் பலத்தை நிரூபிக்க கட்சிகள் முண்டியடிப்பு

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ஆம் திகதி நடைபெறவுள்ள மே தின பேரணிகளில் தமது பலத்தை வெளிப்படுத்தவும், பாராளுமன்றத்தில்  ஆசன மாற்றம் செய்யவும் பிரதான அரசியல் கட்சிகள் மக்களை ஒன்று திரட்டி விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்க்கட்சிகளின் மே பேரணிகளுக்கு அரசாங்க அமைச்சர்களை சேகரிக்கவும், அரசாங்கத்தின் மே பேரணிகளுக்கு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களை சேகரிக்கவும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்த பேரணிகளுக்கு திரளும் மக்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், பல்வேறு அரசியல் கட்சிகளின் பலமான அரசியல் பிரமுகர்கள் தற்போது இரகசிய இடங்களில் இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd