web log free
May 06, 2024

இ.தொ.கா அழைப்பு விடுத்துள்ள போராட்டத்திற்கு திகாம்பரம் பூரண ஆதரவு

நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் நாளை (22) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.

நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்த போதிலும் தோட்ட கம்பனிகள் சம்பளத்தை வழங்க இணங்காததற்கு எதிராக தோட்ட தொழிலாளர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது. ண