web log free
June 09, 2025

ஈரான் ஜனாதிபதி வருகையால் பல வீதிகளுக்கு பூட்டு

இன்று கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறு பாதைகள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான அதிவேக வீதி இன்று(24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றிரவு (23) விசேட ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த காலப்பகுதியில் அதிவேக வீதியில் இருந்து பேலியகொடை, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை, பொரளை, D.S.சேனநாயக்க சந்தி, ஹோட்டன் சதுக்கம், ஹோட்டன் சுற்றுவட்டம், கிறீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, புனித மைக்கல் வீதி, காலி வீதியில் இருந்து கோட்டை வரையான மார்க்கம் மற்றும் ஹில்டன் ஹோட்டல் வரையிலான மார்க்கம் ஆகியன மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd