web log free
May 17, 2026

மொட்டுக் கட்சி குறித்து மேலும் ஒரு எம்பி அதிருப்தி

கட்சி தொடர்பில் தாம் பெரும் ஏமாற்றமடைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். 

கட்சியின் சில தலைவர்கள் தம்மை பொருட்படுத்துவதில்லை எனவும் எம்.பி. கூறினார். 

பத்தரமுல்ல புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற புதிய கூட்டணி கொழும்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் பக்மஹா விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கட்சிக்காக தாம் உழைத்த போதிலும் கட்சியினால் தமக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும், வேறு எந்த வேட்பாளரும் பார்வையில் இல்லை எனவும் எம்.பி. தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புதிய கூட்டணி பாலர் பாடசாலை சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத் மற்றும் ஒரு குழுவினர் கலந்து கொண்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd