web log free
September 08, 2024

'இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது'

முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையாகியுள்ளமை வருத்தத்துக்குரிய விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’. முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.