web log free
March 10, 2026

சம்பள விடயத்தில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 1200 ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

1200 ரூபா வரை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தயார் எனவும் எனினும், அதனை உற்பத்திக்கு அமைவான சம்பளமாக அமையாத, அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கவில்லை எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மே மாதம் 15 ஆம் திகதி வரை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அவர்களின் எதிர்ப்பிற்கு அமைய, 15 ஆம் திகதியின் பின்னர் மீண்டுமொரு வர்த்தமானியை வெளியிட அரசாங்கத்திற்கு நேரிடும் எனும் அமைச்சர் தெரிவித்தார். 

1200 ரூபா வரை அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கும் மேலதிகமாக பறிக்கும் கொழுந்திற்கு விலையை நிர்ணயிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கமும் அமைச்சரும் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 

தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd