web log free
May 06, 2025

நீதிமன்றம் ஊடாக சஜித் கட்சிக்கு சவால் விடும் டயானா

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக்கோரி டயனா கமகேயால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (10) தீர்மானித்துள்ளது.

நீதியரசர்கள் காமினி அமரசேகர, குமுதுனீ விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்

முன்னிலையில் இந்த மனு நேற்று கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் விடயங்களை முன்வைத்ததுடன் , இந்த மனு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதியை குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கமைவாக மனுவை இம்மாதம் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், அன்றையதினம் மனுவை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று மூவரடங்கிய நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அமர்வு தெரிவித்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd