web log free
September 08, 2024

சிறை ஊழியர்களுக்கு 15000 கொடுப்பனவு

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று (20) பணிப்புரை விடுத்துள்ளார்.

நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகளின் கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சர் மீளாய்வு செய்தார்.

இதன்படி, பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளை போன்று ஒரே நேரத்தில் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதுவரை 15,000 உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான காமினி திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.