web log free
November 08, 2025

உதயங்க கூறுவது உண்மையா? பசில் பதில்

எதிர்வரும் 15ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற கதை தமக்கு தெரியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் கருத்து தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வினவியபோதே பசில் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை தொடர்பில் உதயங்க வீரதுங்கவிடம் கேட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் தனது கருத்தை கலந்துரையாடியதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd