web log free
April 09, 2026

மேலும் ஒரு புதிய கூட்டணி!

இன்று (27ம் திகதி) பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து, 'ஒன்றுபடும் நாடு - மகிழ்ச்சி நிறைந்த தேசம்' என்ற தொனிப்பொருளில் 'சர்வ ஜன பௌல' என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அதற்காக மௌபிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, துடுகாம தேசிய உரையாடல் வட்டம், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை உறுப்பினர் மன்றம் என்பன உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

அதன்படி, தொடர்புடைய அரசியல் இயக்கத்தை நிறுவுவதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd