web log free
June 09, 2025

டயானாவுக்கு கால அவகாசம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சமகி ஜன பலவேக கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து விசாரிப்பதா அல்லது வாபஸ் பெறுவதா என்பதை முடிவு செய்ய ஜூலை (07) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்று, இந்த மனு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மனுதாரருக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd