web log free
September 08, 2024

சுயவிருப்பில் வெளியேறினார் அத்துரலிய தேரர்


நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், கண்டி வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்ணாவிரரத்தில் ஈடுபட்டு உடல்நிலை மோசமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அத்துரலிய ரத்தன தேரர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தனது சுய விருப்பின் பேரில் அத்துரலிய ரத்தன தேரர் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.