web log free
May 28, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு புதிய குழு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கூறப்படும் முன் மற்றும் பின் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை ஆராய்வதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ என்.ஜே. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் அறிக்கை இவ்வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd