web log free
March 16, 2026

16 வயது சிறுமி மீது சுடுகாட்டில் வைத்து பாலியல் கொடூரம்!

ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நேற்று தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 05 பேர் பலவந்தமாக சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd