web log free
September 08, 2024

சஜித்தின் தகுதி குறித்து அநுர கடும் தாக்குதல்!

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதியின் மகனாக இல்லாவிட்டால் மட்டக்களப்பு நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு கூட தகுதியற்றவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் இருப்பதற்கான ஒரே தகுதி அவர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது மட்டுமே என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.