web log free
September 07, 2024

சட்டமா அதிபரின் எதிர்ப்பால் ஹிருணிகா சிக்கலில்

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று(04) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். 

இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பிணை கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதால் அதனை எழுத்துமூலம் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். 

இதன்பிரகாரம் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு காலஅவகாசம் வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கை மீண்டும் ஜூலை 11ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டார்.