web log free
September 08, 2024

நாளையும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

இன்று (8) பணிக்கு சமூகமளித்தாலும் நாளை (9) நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை சுகயீன விடுப்பு குறித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு முழுவதும் 230க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.