web log free
September 08, 2024

விசாரணைகளை இடைநிறுத்த அதிரடியாக களமிறங்கிய பியூமி

தமக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்களைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி பியுமி ஹன்ஸ்மாலி என்ற மாடல் அழகி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் விதம் நியாயமானது அல்ல என்றும், அவர்கள் கடும் பாரபட்சம் காட்டுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.