web log free
September 08, 2024

புதிய கூட்டணி பதுளையில் செய்யப்போகும் மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் பதுளை மாவட்ட மக்கள் பேரணி ஜூலை 14ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு பதுளை வில்ஸ் பார்க் விளையாட்டரங்கில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசத்தை வெல்வோம் - எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் மூன்றாவது பொதுப் பேரணி இதுவாகும் என புதிய கூட்டணியின் பிரதான ஊடக இணைப்பாளர் ருச்சிர திலான் மதுசங்க தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் பதுளை மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் ஆரம்பத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரணிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாக மதுசங்க தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் சக்தியை சரியான திசையில் அணிதிரட்டப்போகும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு இலங்கை கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து புதிய கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக புதிய கூட்டணியின் நிறுவனர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, நளின் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.