web log free
August 07, 2025

அதிருப்தி எம்பிக்களை திருப்திபடுத்தும் திட்டத்தில் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேக குறித்து ஏமாற்றமடைந்துள்ள எம்.பி.க்களுடன் பேசி அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சியின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி விவகாரங்களில் இருந்து விலகியிருந்த ராஜித சேனாரத்ன மற்றும் தலதா அத்துகோரல ஆகியோருடன் தொலைபேசியில் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு கடந்த காலத்தை மறந்துவிட்டு மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் இணையுமாறு சஜித் பிரேமதாச தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் அவர்கள் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd