web log free
April 21, 2025

பஸ் வழங்க சஜித்துக்கு பணம் கொடுப்பது யார் என்று கூறினால் SJBயில் இணையத் தயார்

ராஜபக்சக்களை தாம் ஒரு போதும் பாதுகாக்கவில்லை எனவும், அவ்வாறு பாதுகாத்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக தனது சொந்தக் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட போது முதலில் முன்வந்தவர் தாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமகி ஜன பலவேகவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராடத் தயாராக இருப்பதாகவும், ஆனால் பாடசாலைகளுக்கு பஸ் விநியோகிக்க யார் பணம் வழங்குகிறார்கள் என்பதை சஜித் பிரேமதாச முதலில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd