web log free
January 29, 2026

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொட கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி வந்தார் என்பது இதுவரை வெளியாகவில்லை.

உயிரிழந்த நபர் தற்போது பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த தசுன் மானவடுவின் சீடன் எனவும், அவர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd