web log free
June 08, 2025

பொலிஸ் மா அதிபர் தேவையில்லை!

தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடையாக இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் இருப்பின், தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு செய்துகொள்ள முடியும் எனவும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் எவ்வித தடைகளும் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd