web log free
September 18, 2025

மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிவிப்பு

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் இடையில் நேற்று (01) இரவு விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அரசியல் நோக்கத்திற்காக பொய்யான செய்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பது எனது நம்பிக்கை.

எனவே இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd