web log free
April 21, 2025

20 லட்சம் வாக்குகள் தீர்மானிக்கப் போகும் வெற்றி!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் அதி முக்கியத்துவமான சுமார் 20 இலட்சம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தேடுதலில் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பத்திரிகைத் துறைத் தலைவர் பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி நடத்திய ஆய்வின்படி பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கும் வேட்பாளரை முடிவு செய்துள்ள நிலையில் 20 லட்சம் வாக்காளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

இம்முறை எந்தவொரு வேட்பாளரும் 50% வீதத்தில் தேர்ச்சி பெறமாட்டார்கள் எனவும், தீர்மானகரமான இருபது இலட்சம் வாக்குகளின் நடத்தைக்கேற்ப ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd