web log free
May 22, 2026

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

நாட்டின் எதிர்காலம் கருதி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபையில் தம்மை ஆதரிக்க எடுத்த முடிவுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானை தொலைபேசியில் அழைத்து இ.தொ.காவிற்கு நன்றி தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்தது. இந்நிலையில் இ.தொ.காவின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd