web log free
April 09, 2026

மகளை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் தந்தை கைது

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேம்பியன்  மேல் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய தனது பாடசாலை வயது மகளை துஷ்பிரயோகம் செய்த 44 வயதுடைய தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தாயார் கொழும்பில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாகவும், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது மகள் தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

பொகவந்தலா பொலிஸில் தாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலை மாணவியை டிக்ஓயா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd