web log free
October 20, 2025

கடன் பெறாமல் முன்னோக்கி நகர முடியாது

நாடு தற்போது கடனில் இயங்குவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் காரணமாக இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு புதிய வருமானம் கிடைக்காது எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எனவே, உள்நாட்டிலேயே கடன் வாங்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்காத பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd