web log free
October 23, 2024

நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க ரணில் தயார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, காலி உலுவித்திகே பிரதான கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடங்களை மாற்றுவது முக்கியமல்ல.தலைமைத்துவம் முக்கியம்.

ரணில் விக்கிரமசிங்க தனது அணிக்கு தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மேலும் தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்காக உழைக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக வஜிர தெரிவித்தார்.