web log free
January 24, 2026

இன்றும் குண்டுப் புரளி

இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்து கொண்டிருந்த இந்திய விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், பிற்பகல் 3.15 மணிக்கு கட்டுநாயக்கவுக்கு வரவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தரையிறங்கும் முன் தொலைபேசி செய்தி வந்ததாக கூறுகிறது.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd