web log free
May 08, 2026

அநுரவுக்கு ரணில் விடுக்கும் சவால்

சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அடுத்த சில தினங்களுக்குள் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இரத்தினபுரி கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க, பொருளாதார ஆலோசகர் உட்பட நிதி அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அவர்கள் முன்வைத்த யோசனைகள் குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார். 

 

“சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை எனவும், அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் பேச்சுவார்த்தை நிறைவுபெறும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது ஒரு நல்ல கதை. அனைத்து வேலைகளும் நன்றாக உள்ளது என அனுர தெரிவித்தார். இப்போது நாலு கோடிக்கு முந்திரி சாப்பிட்டேன் என்று சொல்கிறார்கள். பிறகு நான் வேறு வேலை செய்ய வேண்டியதில்லை. இதனை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி என்ற ரீதியில் நாணய நிதியத்துடன் நிதியுடன் கலந்துரையாடி வேறு ஏதாவது முக்கிய தீர்மானத்தை எடுத்தால் பாராளுமன்றத்திற்கோ அல்லது மக்களுக்கோ கூறுவேன். இதுவரை ஜனாதிபதி எதனையும் அறிவிக்கவில்லை. எனவே, நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் வருகையின் பின்னர் கலந்துரையாடல்களின் உண்மையான நிலை குறித்து அடுத்த சில நாட்களுக்குள் நாட்டுக்கு அறிவிக்க வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு. நாங்கள் கூறும் புள்ளி விவரங்கள் தவறாக இருந்தால், இந்த உண்மைகளை நாட்டுக்கு மறைக்க வேண்டாம்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd