web log free
June 07, 2025

சந்திரிக்கா, மஹிந்த குறித்து ரணில் விடுத்துள்ள கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு செல்வாக்கு செலுத்திய காரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரிகாவின் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு தொடர்பிருப்பதாகவும், குண்டுத் தாக்குதலில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.

மகிந்த ராஜபக்ச தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு இழப்பு என்பது வேறு விடயம் எனினும் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை கருதி அவரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது அனைத்து சிறப்புரிமைகளையும் நீக்கிவிட்டு ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தொடர்ந்தும் இருக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் ரணில் மேலும் கோருகின்றார்.

பாராளுமன்ற முறைமையில் அரசாங்கம் தலையிட வேண்டாம் என எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்துகின்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd