web log free
September 08, 2025

விருந்து கொடுத்தால் எம்பி பதவி பறிபோகும்

நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, 

“வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் இடம்பெற்றுள்ளன.

“இவ்வாறு வாக்காளர்களை மகிழ்விப்பது தேர்தல் சட்டத்தை மீறுவதாகவும், அத்துடன், பணம் இல்லாத மற்ற வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி எனவும் தெரிவித்தார்.

வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக தேர்தல் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஹோட்டல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் சமீபத்தில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை கண்டியில் உள்ள ஹோட்டல்கள் என்று கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு விருந்து கொடுப்பது என்பது சம்பந்தப்பட்டவரின் கவுன்சிலர் பதவியை உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யக் கூட வழிவகுக்கும் என்று, கண்காணிப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd