web log free
March 20, 2026

சில மாகாணங்களில் மண்சரிவு அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்துவிழும் மண்சரிவு நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிலவும் காற்றுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd