web log free
September 16, 2024

போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நேற்று (11ஆம் திகதி) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் நாராஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர்கள் பலருடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வு கிட்டவில்லை எனவும் ரஞ்சித் விஜேசிறி கூறியுள்ளார்.