web log free
June 07, 2025

உப்பு, அரிசி, தேங்காய் தட்டுப்பாட்டுக்கு முன்னைய அரசாங்கங்களே பொறுப்பு

நாட்டின் அரிசி நெருக்கடிக்கு முக்கிய காரணம் கடந்த அரசாங்கம் ஒரு சிலருக்கு அரிசி ஏகபோகத்தை உருவாக்கி சந்தைப்படுத்தல் சபையை பலவீனப்படுத்தி அரச இயந்திரத்தை உடைத்ததேயாகும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உப்பு, அரிசி, தேங்காய் இல்லை என்றால் அதற்கு முன்னைய அரசாங்கங்களே பொறுப்பு எனவும் தற்போதைய அரசாங்கம் இன்னும் 40 நாட்களை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டின் அபிவிருத்திக்காக காத்திருக்கத் தயாராக இருக்கும் மக்கள் 48 நாட்கள் கடக்கும் முன்னரே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கருத்தியலை சுமந்து வருவதாகவும் நளீன் ஹெவேகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd