ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தனது தாயாரின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்குச் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஜனாதிபதியின் தாயார் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.