web log free
May 02, 2026

அரசாங்கத்தின் மோசடியை வெளிப்படுத்தும் ஹிருணிக்கா

பத்தரமுல்ல கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக சமகி ஜன பலவேக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு வாக்களிக்கும் நபர்களின் வீட்டு முகவரிகளில் வேறு நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வீட்டில் உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை உள்ளிட்டு ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதே இதன் நோக்கம் என ஹிருணிகா பிரேமச்சந்திர கூறுகிறார்.

மோசடி மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்க அணியினரே இதனை செய்து வருவதாகவும் முன்னாள் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd