கொழும்பு பதுளை வீதியில் ஹப்புத்தளை விகாரகல பிரதேசத்தில் வேன் ஒன்று தொழிநுட்பக் கோளாறினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரணை பிரதேசத்தில் இருந்து பயணித்தவர்களே விபத்தில் சிக்கினர்.
காயமடைந்த 13 பேர் தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.